என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு: அ.தி.மு.க.வினர் 5 பேர் அதிர்ச்சியில் பலி
Byமாலை மலர்5 Dec 2016 10:24 AM GMT (Updated: 5 Dec 2016 12:06 PM GMT)
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் 5 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
பண்ருட்டி:
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பண்ருட்டி அருகேயுள்ள அண்ணாகிராமம் ஒன்றியம் சன்னியாசிப்பேட்டை காந்தி நகர் காலனியைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை கிளைச் செயலாளர் நீலகண்டன் பதட்டத்துடன் காணப்பட்டார். கோவிலுக்குச் சென்று முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டினார்.
வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டி.நெய்வாசல் கிளை அ.தி.மு.க. செயலாளராக இருந்தார்.
அதே தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு. நெய்வாசல் கிளை அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஜெயலலிதா உடல் நிலைப்பாதிப்பு பற்றி அறிந்த சாமுண்டியும், தங்கராசும் மனவேதனை அடைந்தனர். இந்த நிலையில் தங்கராசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். தகவல் அறிந்த சாமுண்டி அங்கு விரைந்து சென்றார். தங்கராசுவின் வீட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
பின்னர் தனது வீட்டுக்கு சென்று டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் நெஞ்சுவலியால் இறந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு நத்தம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியில் இறந்தார். அவரது பெயர் பெரியசாமி. நத்தம் குட்டுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ஆவார்.
கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகரை சேர்ந்தவர் மாரிச்சாமி. மனைவி பழனியம்மாள் என்ற பண்ணம்மாள் (வயது 62). கூலித்தொழிலாளி. அ.தி.மு.க உறுப்பினர்.
ஜெயலலிதா உடல்நிலை அறிந்து மனம் உடைந்த பண்ணம்மாள் டி.வி. பார்த்தவாறே மயங்கி விழுந்தார். அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பண்ருட்டி அருகேயுள்ள அண்ணாகிராமம் ஒன்றியம் சன்னியாசிப்பேட்டை காந்தி நகர் காலனியைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை கிளைச் செயலாளர் நீலகண்டன் பதட்டத்துடன் காணப்பட்டார். கோவிலுக்குச் சென்று முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டினார்.
வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டி.நெய்வாசல் கிளை அ.தி.மு.க. செயலாளராக இருந்தார்.
அதே தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு. நெய்வாசல் கிளை அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஜெயலலிதா உடல் நிலைப்பாதிப்பு பற்றி அறிந்த சாமுண்டியும், தங்கராசும் மனவேதனை அடைந்தனர். இந்த நிலையில் தங்கராசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். தகவல் அறிந்த சாமுண்டி அங்கு விரைந்து சென்றார். தங்கராசுவின் வீட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
பின்னர் தனது வீட்டுக்கு சென்று டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் நெஞ்சுவலியால் இறந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு நத்தம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியில் இறந்தார். அவரது பெயர் பெரியசாமி. நத்தம் குட்டுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ஆவார்.
கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகரை சேர்ந்தவர் மாரிச்சாமி. மனைவி பழனியம்மாள் என்ற பண்ணம்மாள் (வயது 62). கூலித்தொழிலாளி. அ.தி.மு.க உறுப்பினர்.
ஜெயலலிதா உடல்நிலை அறிந்து மனம் உடைந்த பண்ணம்மாள் டி.வி. பார்த்தவாறே மயங்கி விழுந்தார். அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X