என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்4 Dec 2016 7:11 AM GMT (Updated: 4 Dec 2016 7:11 AM GMT)
வங்க கடலில் நடா புயல் வந்து சென்ற பிறகு தமிழக-ஆந்திர எல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூர்:
வங்க கடலில் நடா புயல் வந்து சென்ற பிறகு தமிழக - ஆந்திர எல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 418 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று 484 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர மழை தண்ணீர் 150 கன அடி வருகிறது.
ஏரியில் 319 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
புழல் ஏரிக்கு வினாடிக்கு 476 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 83 கன அடி குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.
சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 84 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் 270 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக 98 கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது.
பூண்டி ஏரியில் 20 மி.மீட்டர் மழையும், புழல் ஏரியில் 14 மி.மீட்டர், சோழவரம் ஏரியில் 20 மி.மீட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 10 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளதால் ஏரிகளுக்கு மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
வங்க கடலில் நடா புயல் வந்து சென்ற பிறகு தமிழக - ஆந்திர எல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 418 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று 484 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர மழை தண்ணீர் 150 கன அடி வருகிறது.
ஏரியில் 319 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
புழல் ஏரிக்கு வினாடிக்கு 476 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 83 கன அடி குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.
சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 84 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் 270 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக 98 கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது.
பூண்டி ஏரியில் 20 மி.மீட்டர் மழையும், புழல் ஏரியில் 14 மி.மீட்டர், சோழவரம் ஏரியில் 20 மி.மீட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 10 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளதால் ஏரிகளுக்கு மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X