என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி மரணம்: அமைச்சர் அஞ்சலி
Byமாலை மலர்3 Dec 2016 8:07 AM GMT (Updated: 3 Dec 2016 8:07 AM GMT)
நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி 90 வயதில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இறுதிச்சடங்கு இன்று நடந்தது.
வேலூர்:
ஆம்பூரை சேர்ந்தவர் தியாகி கோவிந்தம்மாள் (வயது 90). ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய பெருமைக்குரியவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றுள்ளார்.
ஐ.என்.ஏ. ராணுவ முகாமில் மாறுவேடத்தில் புகுந்த நேதாஜியை அடையாளம் தெரியாமல் போனதால், அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். மாறுவேடம் களைந்த பிறகே, நேதாஜியை அனுமதித்தார்.
இந்த துணிச்சலுக்காக நேதாஜியிடம் கோவிந்தம்மாள் பாராட்டு பெற்றவர். ஆம்பூரில் லாரி டிரைவராக வேலை செய்துவந்த கோவிந்தமாளின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார்.
அதன்பிறகு கோவிந்தம்மாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைத்தல், மாவு அரவை மில்லில் வேலை என்று பல வேலைகளை செய்து வந்தார். பின்னர், வயது முதிர்வு காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது.
மாநில அரசு வழங்கிய ஓய்வூதியத்தை மட்டுமே பெற்று வாழ்ந்து வந்தார். கடைசி வரை தியாகி கோவிந்தமாளுக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. இந்த நிலையில் கோவிந்தம்மாள் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.
இவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பாலாற்றங்கரையில் நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், ஆம்பூர் எம்.எல்.ஏ. பால சுப்பிரமணியன் மற்றும் பிரமுகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தியாகி கோவிந்தமாளின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
ஆம்பூரை சேர்ந்தவர் தியாகி கோவிந்தம்மாள் (வயது 90). ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய பெருமைக்குரியவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றுள்ளார்.
ஐ.என்.ஏ. ராணுவ முகாமில் மாறுவேடத்தில் புகுந்த நேதாஜியை அடையாளம் தெரியாமல் போனதால், அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். மாறுவேடம் களைந்த பிறகே, நேதாஜியை அனுமதித்தார்.
இந்த துணிச்சலுக்காக நேதாஜியிடம் கோவிந்தம்மாள் பாராட்டு பெற்றவர். ஆம்பூரில் லாரி டிரைவராக வேலை செய்துவந்த கோவிந்தமாளின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார்.
அதன்பிறகு கோவிந்தம்மாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைத்தல், மாவு அரவை மில்லில் வேலை என்று பல வேலைகளை செய்து வந்தார். பின்னர், வயது முதிர்வு காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது.
மாநில அரசு வழங்கிய ஓய்வூதியத்தை மட்டுமே பெற்று வாழ்ந்து வந்தார். கடைசி வரை தியாகி கோவிந்தமாளுக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. இந்த நிலையில் கோவிந்தம்மாள் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.
இவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பாலாற்றங்கரையில் நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், ஆம்பூர் எம்.எல்.ஏ. பால சுப்பிரமணியன் மற்றும் பிரமுகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தியாகி கோவிந்தமாளின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X