என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: அரசு பஸ் டிரைவர் கைது
Byமாலை மலர்3 Dec 2016 4:39 AM GMT (Updated: 3 Dec 2016 4:39 AM GMT)
களியக்காவிளை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி:
களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையில் உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 45).
இவர், கேரள அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சுனில்குமாரின் நண்பர் ஒருவர், அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரு கிறார். சுனில்குமார் அடிக்கடி நண்பரின் வீட்டிற்கு செல்வார். இதனால் நண்பரின் மகள் சுனில்குமாரிடம் பாசமாக பழகி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தார். இரவில் நண்பர் வீடு திரும்பியபோது அவரது மகள் அழுது கொண்டிருந்தார்.
அழுகைக்கான காரணம் பற்றி கேட்டபோது, சுனில் குமார் வீடு புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறினார்.
அதிர்ச்சி அடைந்த நண்பர் இதுபற்றி, காட்டாக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மாணவியை சுனில்குமார் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுனில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நெய்யாற்றின் கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுனில்குமாரை சஸ்பெண்டு செய்து போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையில் உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 45).
இவர், கேரள அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சுனில்குமாரின் நண்பர் ஒருவர், அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரு கிறார். சுனில்குமார் அடிக்கடி நண்பரின் வீட்டிற்கு செல்வார். இதனால் நண்பரின் மகள் சுனில்குமாரிடம் பாசமாக பழகி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தார். இரவில் நண்பர் வீடு திரும்பியபோது அவரது மகள் அழுது கொண்டிருந்தார்.
அழுகைக்கான காரணம் பற்றி கேட்டபோது, சுனில் குமார் வீடு புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறினார்.
அதிர்ச்சி அடைந்த நண்பர் இதுபற்றி, காட்டாக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மாணவியை சுனில்குமார் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுனில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நெய்யாற்றின் கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுனில்குமாரை சஸ்பெண்டு செய்து போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X