என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்திகை தீபத்திருவிழா: நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
Byமாலை மலர்2 Dec 2016 10:12 AM GMT (Updated: 2 Dec 2016 10:12 AM GMT)
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளார்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொதுமேலாளர் செல்வகோமதிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் வருகிற 12-ந் தேதி (திங்கட் கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதையொட்டி நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்ற பஸ்கள் 11-ந் தேதி மாலை மற்றும் இரவில் புறப்பட்டு 12-ந் தேதி காலையில் திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது. தீப திருவிழா முடிந்த பிறகு 12-ந் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் புறப்பட்டு 13-ந் தேதி காலையில் இங்கே வந்து சேரும்.
இந்த சிறப்பு பஸ்களில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்ய விரும்புகிற பயணிகளுக்காக முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய வருகிற 7ந் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொதுமேலாளர் செல்வகோமதிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் வருகிற 12-ந் தேதி (திங்கட் கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதையொட்டி நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்ற பஸ்கள் 11-ந் தேதி மாலை மற்றும் இரவில் புறப்பட்டு 12-ந் தேதி காலையில் திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது. தீப திருவிழா முடிந்த பிறகு 12-ந் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் புறப்பட்டு 13-ந் தேதி காலையில் இங்கே வந்து சேரும்.
இந்த சிறப்பு பஸ்களில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்ய விரும்புகிற பயணிகளுக்காக முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய வருகிற 7ந் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X