என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகை: தென் மாவட்டங்களுக்கு விமானத்தில் செல்லவும் டிக்கெட் இல்லை
Byமாலை மலர்28 Oct 2016 1:25 AM GMT (Updated: 28 Oct 2016 1:26 AM GMT)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களிலும் இன்று(வெள்ளிக்கிழமை) வரை டிக்கெட் இல்லை.
ஆலந்தூர் :
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களிலும் இன்று(வெள்ளிக்கிழமை) வரை டிக்கெட் இல்லை.
சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 8 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் 2 தினங்களுக்கு டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டிகை காலங்களில் பஸ்கள், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது போல் தற்போது விமானங்களிலும் கூட்டம் நிரம்பிவிட்டன. எனவே பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு விமான சேவையையும் அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களிலும் இன்று(வெள்ளிக்கிழமை) வரை டிக்கெட் இல்லை.
சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 8 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் 2 தினங்களுக்கு டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டிகை காலங்களில் பஸ்கள், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது போல் தற்போது விமானங்களிலும் கூட்டம் நிரம்பிவிட்டன. எனவே பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு விமான சேவையையும் அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X