search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை மனுத்தாக்கல்
    X

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை மனுத்தாக்கல்

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.

    நேற்று முதல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாதேவன் மற்றும் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளிட்ட 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற 30-ந் தேதி முதல் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், நாளை அல்லது 2-ந் தேதி மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
    Next Story
    ×