search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு
    X

    கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

    கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அருகே பெரியகுயிலி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 2½ அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை உள்ளது.

    பூஜைகள் முடிந்ததும் இந்த சிலையை பீரோவை வைத்து பூட்டி சென்று விடுவது வழக்கம். சாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளையும் லாக்கரில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.

    நேற்று இரவு கோவிலின் பின்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்றனர்.

    இன்று காலை கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் சாமி சிலை இருக்கும் பீரோவை மட்டும் உடைத்து சிலையை திருடி சென்றுள்ளனர். அதன் அருகே நகைகள் இருக்கும் லாக்கரை உடைக்கவில்லை. இதனால் நகைகள் தப்பியது.

    அதேநேரம் சிலையை மட்டும் திருடி சென்றிருப்பதால் கொள்ளையர்கள் சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×