என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே பெரியகுயிலி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 2½ அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை உள்ளது.
பூஜைகள் முடிந்ததும் இந்த சிலையை பீரோவை வைத்து பூட்டி சென்று விடுவது வழக்கம். சாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளையும் லாக்கரில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.
நேற்று இரவு கோவிலின் பின்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்றனர்.
இன்று காலை கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் சாமி சிலை இருக்கும் பீரோவை மட்டும் உடைத்து சிலையை திருடி சென்றுள்ளனர். அதன் அருகே நகைகள் இருக்கும் லாக்கரை உடைக்கவில்லை. இதனால் நகைகள் தப்பியது.
அதேநேரம் சிலையை மட்டும் திருடி சென்றிருப்பதால் கொள்ளையர்கள் சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்