search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய வசதி
    X

    திருப்பரங்குன்றம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய வசதி

    திருப்பரங்குன்றம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 19-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 291 வாக்கு சாவடியிலுமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சரிவு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஓவ்வொரு சக்கர நாற்காலியில் அமர்ந்து சரிவு பாதை வழியாக வாக்கு சாவடிக்குள் சென்று வாக்களிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்காக 97 சக்கர நாற்காலி தயார் படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×