என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேணிக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியது: 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்25 Oct 2016 6:10 AM GMT (Updated: 25 Oct 2016 6:11 AM GMT)
கேணிக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சுத்திவலசையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நவீன் (வயது18). வட்டான்வலசையை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தினேஷ் (18).
நேற்று இரவு நவீனும், தினேசும் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர். அம்மன் கோவில் அருகே அவர்கள் சென்றபோது, அந்த வழியே தூத்துக்குடியில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன் வலைகள் ஏற்றிய டிராக்டர் ஜீப் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த நவீன், தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X