search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது
    X

    சோழவரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது

    சோழவரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    சோழவரம் அருமந்தை கன்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கவிதா (12 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு உயர் பள்ளியில் 5 வகுப்பு படித்து வருகிறாள்.

    இவர் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையில் வெளியில் சென்றார். அப்போது அந்த பள்ளியின் ஆசிரியர் சீனிவாசன் (40) கவிதாவை தனது அறைக்கு கூப்பிட்டார். உள்ளே சென்ற அவர் கவிதாவை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டினார்.

    கவிதா வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் கூறினார். பின்னர் இன்று காலை கவிதா பள்ளிக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    மாணவியை உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதை பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவி படிக்கும் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பள்ளிக்கு சென்று ஆசிரியர் சீனிவாசனை கைது செய்தனர்.

    Next Story
    ×