search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
    X

    அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

    அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை அசோக்நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து திருடு போனது. இது குறித்து வந்த புகாரை அடுத்து பைக் திருடர்களை பிடிக்க அப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கே.கே. நகர் பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சிக்கந்தர்,திருநின்றவூர் பெரியார் நகரை சேர்ந்த சமீர் பாஷா இருவரும் கூட்டாக இணைந்து அப்பகுதியில் பைக்குகளை திருடி அதன் உதிரி பாகங்களை விற்கமுயல்வது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×