search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு கிரேன் மோதி நோயாளி பலி
    X

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு கிரேன் மோதி நோயாளி பலி

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு கிரேன் மோதி நோயாளி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தணிகாசலம் என்பவர் காலில் அடிபட்டதற்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து காயத்தை சுத்தம் செய்து சிகிச்சை பெற்று செல்வார். இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் சிகிச்சை பெற்று விட்டு ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது ஆஸ்பத்திரி முன்பு திருவள்ளுரில் இருந்து மணவாளநகருக்கு சென்ற கிரேன் தணிகாசலம் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தணிகாசலம் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தணிகாசலம் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×