என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை - மாவட்ட வன அதிகாரி எச்சரிக்கை
Byமாலை மலர்21 Oct 2016 9:58 AM GMT (Updated: 21 Oct 2016 9:58 AM GMT)
தீபாவளியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது முதுமலை புலிகள் சரணாலயம். இது தமிழகம், கேரளம், கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவைகள் மற்றும் சந்தனம், ஈட்டி, கருமட்டை உள்ளிட்ட விலை உயர்ந்து மரங்களும் உள்ளன.
தற்போது இந்த பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வனப்பகுதியொட்டியுள்ள கிராம மக்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொக்காபுரம், மசினகுடி, வாழைத்தோட்டம், சிங்காரா, கல்லட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள், லாட்ஜூகளில் ராக்கெட் உள்ளிட்ட பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கல்லட்டி வாகன சோதனையில் 1 வாரம் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும், காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் கடும் என மாவட்ட வன அதிகாரி கலாநிதி எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது முதுமலை புலிகள் சரணாலயம். இது தமிழகம், கேரளம், கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவைகள் மற்றும் சந்தனம், ஈட்டி, கருமட்டை உள்ளிட்ட விலை உயர்ந்து மரங்களும் உள்ளன.
தற்போது இந்த பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வனப்பகுதியொட்டியுள்ள கிராம மக்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொக்காபுரம், மசினகுடி, வாழைத்தோட்டம், சிங்காரா, கல்லட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள், லாட்ஜூகளில் ராக்கெட் உள்ளிட்ட பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கல்லட்டி வாகன சோதனையில் 1 வாரம் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும், காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் கடும் என மாவட்ட வன அதிகாரி கலாநிதி எச்சரித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X