என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
காரைக்கால்:
காரைக்கால் பெசன்ட் நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி. ரெயில்வே ஊழியர். இவரது மகன் ஜான்பெர்னான்டஸ் (வயது 28). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தங்கி திட்டக்குடியில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஜான்பெர்னான்டஸ் வேலை முடிந்து விருத்தாசலத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவைையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜான்பெர்னான்டஸ் மூளை சாவு அடைந்தார்.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் ‘நீங்கள் விரும்பினால் ஜான்பெர்னான்டஸ் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்’ என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் ஜான்பெர்னான்டஸ் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்மதித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜான்பெர்னான்டசின் இருதயம், நுரையீரல், கல்லீரல், கண், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதில் இருதயம் சென்னையில் உள்ள மலர் ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்