search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் அருகே அப்துல்கலாம் நினைவிடம் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
    X

    ராமேசுவரம் அருகே அப்துல்கலாம் நினைவிடம் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

    ராமேசுவரம் அருகே அப்துல்கலாம் நினைவிடம் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கியது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் காவல் துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக முதல் கட்டமாக நினைவிடம் எதிரிலும் சாலை ஓரத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த 17 கம்பிகள் அமைக்கப்பட்டன.

    நினைவிடம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளில் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்தன. இன்னும் ஓரிரு நாட்களில் கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

    மேலும் நினைவிடம் அருகிலேயே காவல் துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறையும், அமைக்கப்பட்டு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×