என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்: போலீசில் புகார்
Byமாலை மலர்28 Sep 2016 4:39 AM GMT (Updated: 28 Sep 2016 4:39 AM GMT)
விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகம் அங்குள்ள மதுரை சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. திருச்சியில் இருந்து அனுப்பப்பட்டதாக அஞ்சல் முகவரி உள்ள அந்த கடிதத்தில், பா.ஜனதாவை மிரட்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கஜேந்திரன், விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
அன்புடையீர், பாரதிய ஜனதா, காங்கிரஸ் இருவரும் நாட்டை ஆளும்போதெல்லாம் தமிழ் மாநில மக்கள் நம் நாட்டின் ஒரு அங்கம், தம் குடிமக்கள் என்று கருதாமல், முடிந்தவரை துரோகம் செய்து, வளமான மாநிலத்தை பாழாக்கி விட்டார்கள். உங்களின் செயல்பாட்டை மட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் இருந்து இலவசமாக தடுப்பு மருந்து பெற்று நாங்கள் பயன்படுத்தும் போதுதான் நீங்கள் சும்மா இருப்பீர்கள்...
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தது.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகம் அங்குள்ள மதுரை சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. திருச்சியில் இருந்து அனுப்பப்பட்டதாக அஞ்சல் முகவரி உள்ள அந்த கடிதத்தில், பா.ஜனதாவை மிரட்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கஜேந்திரன், விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
அன்புடையீர், பாரதிய ஜனதா, காங்கிரஸ் இருவரும் நாட்டை ஆளும்போதெல்லாம் தமிழ் மாநில மக்கள் நம் நாட்டின் ஒரு அங்கம், தம் குடிமக்கள் என்று கருதாமல், முடிந்தவரை துரோகம் செய்து, வளமான மாநிலத்தை பாழாக்கி விட்டார்கள். உங்களின் செயல்பாட்டை மட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் இருந்து இலவசமாக தடுப்பு மருந்து பெற்று நாங்கள் பயன்படுத்தும் போதுதான் நீங்கள் சும்மா இருப்பீர்கள்...
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தது.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X