search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே 12 சிறுவர்கள் உள்பட 29 கொத்தடிமைகள் மீட்பு
    X

    செங்கல்பட்டு அருகே 12 சிறுவர்கள் உள்பட 29 கொத்தடிமைகள் மீட்பு

    செங்கல்பட்டு அருகே 12 சிறுவர்கள், 9 பெண்கள்,8 ஆண்கள் என 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. உடனே அவர்களை மீட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு திமாவரம் அம்பத்தூர் நகர் பகுதியில் 2 செங்கல் சூளைகள் உள்ளன.

    இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா, தேவி, செல்வம், அனிதா என 12 சிறுவர்கள் உள்பட 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம், தாசில்தார் பரிமளாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 12 சிறுவர்கள், 9 பெண்கள், 8 ஆண்கள் என 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. உடனே அவர்களை மீட்டனர்.

    பின்னர் அவர்களுக்கு ரூ.1000, வேட்டி, சேலை, விடுதலை பத்திரத்தை கொடுத்து அனுப்பினர்.கொத்தடிமைகள் மீட்பு சம்பவம் குறித்து அறிந்ததும் செங்கல் சூளையின் உரிமையாளர்கள் பரந்தாமன், காளிமுத்து தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×