என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செங்கல்பட்டு அருகே 12 சிறுவர்கள் உள்பட 29 கொத்தடிமைகள் மீட்பு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு திமாவரம் அம்பத்தூர் நகர் பகுதியில் 2 செங்கல் சூளைகள் உள்ளன.
இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா, தேவி, செல்வம், அனிதா என 12 சிறுவர்கள் உள்பட 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம், தாசில்தார் பரிமளாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது 12 சிறுவர்கள், 9 பெண்கள், 8 ஆண்கள் என 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. உடனே அவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களுக்கு ரூ.1000, வேட்டி, சேலை, விடுதலை பத்திரத்தை கொடுத்து அனுப்பினர்.கொத்தடிமைகள் மீட்பு சம்பவம் குறித்து அறிந்ததும் செங்கல் சூளையின் உரிமையாளர்கள் பரந்தாமன், காளிமுத்து தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்