search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூர் விமானத்தில் எந்திர கோளாறு: சென்னை விமான நிலையத்தில் 13 மணி நேரம் தவித்த பயணிகள்
    X

    சிங்கப்பூர் விமானத்தில் எந்திர கோளாறு: சென்னை விமான நிலையத்தில் 13 மணி நேரம் தவித்த பயணிகள்

    சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் 13 மணி நேரம் பயணிகள் பரிதவித்தனர்.
    சென்னை:

    சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் 13 மணி நேரம் பயணிகள் பரிதவித்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு 107 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது.

    நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார். மேற்கொண்டு விமானத்தை இயக்க முடியாது எனவும், மீண்டும் நடைமேடைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கும்படியும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

    இதனால் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை அதிகாரிகள் சரி செய்ய முயன்றனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பரிதவித்தனர்.

    இதையடுத்து சுமார் 13 மணி நேரம் கழித்து மாற்று விமானம் மூலம் பயணிகளை சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தனர்.
    Next Story
    ×