என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சரஸ்வதி–ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்–நெல்லை இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை:
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:–
* சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 7–ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்–நெல்லை ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (வண்டி எண்: 82601), மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
* அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 8–ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்–நெல்லை ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (82603), மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* திருச்சியில் இருந்து அக்டோபர் 8–ந் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் திருச்சி–சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06026), அதேநாளில் இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்