search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரஸ்வதி–ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்–நெல்லை இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சரஸ்வதி–ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்–நெல்லை இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:–

    * சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 7–ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்–நெல்லை ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (வண்டி எண்: 82601), மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    * அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 8–ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்–நெல்லை ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (82603), மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * திருச்சியில் இருந்து அக்டோபர் 8–ந் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் திருச்சி–சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06026), அதேநாளில் இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடையும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×