என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த மாதம் 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கும்
Byமாலை மலர்26 Sep 2016 9:43 AM GMT (Updated: 26 Sep 2016 9:43 AM GMT)
அக்டோபர் மாதம் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கிப் பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
பொதுவாக மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக உள்ளன. இந்நிலையில் அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகளால் தொடர்ச்சியாக ஐந்து நாள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
அக்டோபர் மாதம் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜையும், 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியும், 12-ம் தேதி புதன்கிழமை மொகரம் பண்டிகையும் வருகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாளாகும். 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறையாகும்.
இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதுடன், ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, பண்டிகைகள் வருவதால் ஏ.டி.எம். மையங்களை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் தேவைப்படும் பணத்தை முன்னரே எடுத்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
பொதுவாக மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக உள்ளன. இந்நிலையில் அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகளால் தொடர்ச்சியாக ஐந்து நாள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
அக்டோபர் மாதம் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜையும், 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியும், 12-ம் தேதி புதன்கிழமை மொகரம் பண்டிகையும் வருகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாளாகும். 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறையாகும்.
இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதுடன், ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, பண்டிகைகள் வருவதால் ஏ.டி.எம். மையங்களை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் தேவைப்படும் பணத்தை முன்னரே எடுத்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X