என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நிலக்கோட்டை அருகே வாலிபரை கொன்று ஓடையில் பிணம் வீச்சு
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சங்கால்பட்டி ஓடை அருகே இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி.சுருளியாண்டி தலைமையில் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர் உடலில் பல இடங்களில் ரத்த காயம் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், இளஞ்சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.
சம்பவ இடத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் இறந்து கிடந்த வாலிபரின் உடலை முகர்ந்து பார்த்து விட்டு நான்கு திசைகளிலும் ஓடியது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்