என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திறந்த வெளி கழிப்பறையை ஒழிக்க 75 ஆயிரம் பேர் விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மனித சங்கிலியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், பெண்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டும் 18 ஆயிரத்து 350 பேர் பங்கேற்றனர். மனித சங்கிலியில் மொத்தம் 75 ஆயிரம் பேர் பங்கு பெற்றனர். மனித சங்கிலியில் அணிவகுத்து நின்றவர்கள் தங்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளையும், டிஜிட்டல் பேனர்களையும் கையில் ஏந்தி நின்றனர்.
இந்த மனித சங்கிலி பேரணியை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார், சமூக சீரமைப்பு மைய இயக்குனர் ராம்குமார், டி.எஸ்.பி. பாலமுருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லீமா ஹெப்சி உள்பட பலர் பங்கேற்றனர். தொடக்க விழாவை முன்னிட்டு அங்கு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை மினி மாரத்தான் போட்டியும் நடத்தப்பட்டது. ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மாரத்தான் போட்டியில் ஓடினர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, குமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் பொதுநலன் சங்கம் மற்றும் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை செய்திருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்