search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்காளன் முன்னாள் மனைவி ரங்கசாமியுடன் திடீர் சந்திப்பு: தேர்தலில் எதிர்த்து நிற்க போவதாக அறிவிப்பு
    X

    அங்காளன் முன்னாள் மனைவி ரங்கசாமியுடன் திடீர் சந்திப்பு: தேர்தலில் எதிர்த்து நிற்க போவதாக அறிவிப்பு

    அங்காளன் முன்னாள் மனைவி ரங்கசாமியுடன் திடீரென சந்தித்து தேர்தலில் நிற்க வாய்ப்பு அளித்தால் தான் தயாராக இருப்பதாக கூறினார்.
    புதுச்சேரி:


    கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அங்காளன். இவர் பிப்டிக் சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரசில் இருந்து விலகிய அங்காளன் எம்.எல்.ஏ. சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார். மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. பதவியையும் அங்காளன் ராஜினாமா செய்தார். அவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் திருபுவனை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முடிவு செய்து தேர்தல் கள பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    அங்காளனின் முதல் மனைவி கவிப்பிரியா. கடந்த 2008-ம் ஆண்டு இவரை அங்காளன் விவகாரத்து செய்து விட்டார். இதையடுத்து கவிப்பிரியா ஆரியபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் கவிப்பிரியா தனது உறவினர்களுடன் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் அலுவலக அறையில் இருந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர் சந்தித்தார்.

    அப்போது ரங்கசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்து ஆசிபெற்றார். பின்னர் அவர் தனக்கு திருபுவனை தொகுதியில் போட்டியிட என்.ஆர். காங்கிரசில் வாய்ப்பளித்தால் தான் தயாராக இருப்பதாக கூறினார்.
    இதையடுத்து கவிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருபுவனை சட்டமன்ற தொகுதியில் அங்காளனை எதிர்த்து என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டுள்ளேன். அவர் வாய்ப்பளித்தால் திருபுவனை தொகுதியில் போட்டியிடுவேன். முதல்-அமைச்சர் மீது திடீரென அங்காளன் வீண் குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஏன் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை கூறவில்லை? எனக்கு திருபுவனை தொகுதியில் ஓட்டு மற்றும் ஆதார் கார்டும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×