என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வரை ஐபிஎல் திருவிழா: ஆரம்பமும், முடிவும் மும்பையில்...
Byமாலை மலர்22 Jan 2018 1:23 PM GMT (Updated: 22 Jan 2018 2:51 PM GMT)
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. #IPL2018 #IPLAuction
பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. 11-வது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தனர். அதில் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிமுறை மாற்றம் முக்கியமானதாகும். வருகிற 27-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வீரர்களின் மெகா ஏலம் நடக்கிறது. இதில் 578 வீரர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 51 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 2-வது ஆட்டம் அல்லது இரவு ஆட்டம் இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை 7 தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேரடி ஒளிப்பரப்பு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. #IPL2018 #IPLAuction #MI
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 51 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 2-வது ஆட்டம் அல்லது இரவு ஆட்டம் இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை 7 தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேரடி ஒளிப்பரப்பு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. #IPL2018 #IPLAuction #MI
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X