search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வரை ஐபிஎல் திருவிழா: ஆரம்பமும், முடிவும் மும்பையில்...
    X

    ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வரை ஐபிஎல் திருவிழா: ஆரம்பமும், முடிவும் மும்பையில்...

    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. #IPL2018 #IPLAuction
    பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. 11-வது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தனர். அதில் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிமுறை மாற்றம் முக்கியமானதாகும். வருகிற 27-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வீரர்களின் மெகா ஏலம் நடக்கிறது. இதில் 578 வீரர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 51 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



    ஐபிஎல் தொடரில் 2-வது ஆட்டம் அல்லது இரவு ஆட்டம் இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை 7 தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேரடி ஒளிப்பரப்பு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. #IPL2018 #IPLAuction #MI
    Next Story
    ×