என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா ஓபன்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி இந்திய வீரர்கள் அபாரம்
Byமாலை மலர்19 Jan 2018 1:36 PM GMT (Updated: 19 Jan 2018 1:36 PM GMT)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி, திவிஜ் சரண் ஜோடி முன்னேறியுள்ளது. #Australianopen #Mensdoubles
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதன், ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - பிரான்ஸின் ரோஜர் வாசலின் ஜோடி, அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயர் - போர்சுகலின் சவுசா ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை 6–2 என போபண்ணா ஜோடி எளிதாக வென்றது. அடுத்த செட்டை, போபண்ணா ஜோடி 7–6 என, கைப்பற்றியது. இதன்மூலம், போபண்ணா - ரோஜர் ஜோடி 6–2, 7–6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ராஜிவ் ராம் ஜோடி, இத்தாலியின் பேபியோ பாக்னினி - ஸ்பெயினின் கிரானலர்ஸ் ஜோடியை 4–6, 7–6, 6–2 என போராடி வென்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றது. #Australianopen #Mensdoubles #RohanBopanna #DivijSharan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X