என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிருபரின் கேள்வியால் விராட் கோலி கோபம்
Byமாலை மலர்18 Jan 2018 10:29 AM GMT (Updated: 18 Jan 2018 10:49 AM GMT)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார். #SAvIND #ViratKohli #Kohli
தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் இந்திய அணியில் செய்த மாற்றங்களால் பலன் இல்லையே? என்று கேட்டார். இதனால் விராட் கோலி கோபம் அடைந்தார். பதட்டம் அடைந்த அவர் நான் இங்கு பதிலளிக்க வந்துள்ளேன். சண்டையிட வரவில்லை என்றார். இதுகுறித்து விராட் கோலி மேலும் கூறியதாவது:-
போட்டியின் முடிவை வைத்து ஒரு அணியை மதிப்பிடக்கூடாது. நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் இது தான் சிறந்த அணி என்று சொல்லி இருப்பீர்களா? சிறந்த 11 வீரர்கள் யார்? என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களை விளையாட வைக்கிறோம்.
34 டெஸ்டில் நாங்கள் எவ்வளவு வெற்றி பெற்று இருக்கிறோம். 21-ல் வெற்றி பெற்று உள்ளோம். இரண்டில் தோற்றோம். எத்தனை ‘டிரா’ செய்து இருக்கிறோம் என்பது எல்லாம் ஒரு விஷயமல்ல. நாங்கள் இங்கு சிறப்பாக விளையாடவே வந்து இருக்கிறோம்.
இவ்வாறு கோலி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் ரகானேயை தேர்வு செய்யாமல் ரோகித் சர்மாவுக்கு முன்னுரிமை கொடுத்தார். 2-வது டெஸ்டில் 3 மாற்றம் செய்தார். தவான், விருத்திமான் சகா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு பதிலாக ராகுல், பார்த்தீவ் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த டெஸ்டில் ரகானே சேர்க்கப்படாதது குறித்து விமர்சிக்கப்பட்டது. அதோடு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. #SAvIND #ViratKohli #Kohli
போட்டியின் முடிவை வைத்து ஒரு அணியை மதிப்பிடக்கூடாது. நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் இது தான் சிறந்த அணி என்று சொல்லி இருப்பீர்களா? சிறந்த 11 வீரர்கள் யார்? என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களை விளையாட வைக்கிறோம்.
34 டெஸ்டில் நாங்கள் எவ்வளவு வெற்றி பெற்று இருக்கிறோம். 21-ல் வெற்றி பெற்று உள்ளோம். இரண்டில் தோற்றோம். எத்தனை ‘டிரா’ செய்து இருக்கிறோம் என்பது எல்லாம் ஒரு விஷயமல்ல. நாங்கள் இங்கு சிறப்பாக விளையாடவே வந்து இருக்கிறோம்.
இவ்வாறு கோலி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் ரகானேயை தேர்வு செய்யாமல் ரோகித் சர்மாவுக்கு முன்னுரிமை கொடுத்தார். 2-வது டெஸ்டில் 3 மாற்றம் செய்தார். தவான், விருத்திமான் சகா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு பதிலாக ராகுல், பார்த்தீவ் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த டெஸ்டில் ரகானே சேர்க்கப்படாதது குறித்து விமர்சிக்கப்பட்டது. அதோடு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. #SAvIND #ViratKohli #Kohli
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X