என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையுடன் விளையாடிய நேரம் வேஸ்ட்: பிஷன் சிங் பெடி காட்டம்
Byமாலை மலர்17 Jan 2018 3:44 PM GMT (Updated: 17 Jan 2018 3:44 PM GMT)
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடருக்கு தயாராகாமல் இலங்கைக்கு எதிரான தொடர் தேவையில்லாத நேரம் விரயம் என பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார். #SAvIND #ViratKohli #INDvSL
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான செஞ்சூரியன் டெஸ்டில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் திணறினார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்தியா தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகவில்லை என்பதுதான்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்திய அணி அங்கு சென்றது. ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. மாறாக தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் இந்தியா இலங்கையுடன் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகாமல் இலங்கையுடன் விளையாடிய நேரம் வேஸ்ட் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிஷன் சிங் பெடி கூறுகையில் ‘‘இந்திய அணி எந்தவொரு நிலையிலும் தங்களை தயார் படுத்தவில்லை. இலங்கையுடன் விளையாடிய நம்முடைய நேரம் வேஸ்ட். தென்ஆப்பிரிக்காவிற்காக தயாராகும் நிலையில் ஒன்றரை மாதமாக வலுவிழந்த அணியுடன் மோதியல் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு கடினமான தொடருக்கு செல்வதற்கு முன் தயார் படுத்ததுவது அவசியமானதாகும்’’ என்றார். #SAvIND #ViratKohli #INDvSL
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்திய அணி அங்கு சென்றது. ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. மாறாக தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் இந்தியா இலங்கையுடன் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகாமல் இலங்கையுடன் விளையாடிய நேரம் வேஸ்ட் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிஷன் சிங் பெடி கூறுகையில் ‘‘இந்திய அணி எந்தவொரு நிலையிலும் தங்களை தயார் படுத்தவில்லை. இலங்கையுடன் விளையாடிய நம்முடைய நேரம் வேஸ்ட். தென்ஆப்பிரிக்காவிற்காக தயாராகும் நிலையில் ஒன்றரை மாதமாக வலுவிழந்த அணியுடன் மோதியல் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு கடினமான தொடருக்கு செல்வதற்கு முன் தயார் படுத்ததுவது அவசியமானதாகும்’’ என்றார். #SAvIND #ViratKohli #INDvSL
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X