search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதம்- ஹர்திக் பாண்டியா ரன்அவுட்
    X

    செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதம்- ஹர்திக் பாண்டியா ரன்அவுட்

    செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா ரன்அவுட் ஆனார். #SAvIND #ViratKohli
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 61 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 65-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் கோலி.



    67-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். விராட் கோலி. 146 பந்தில் சதத்தை தொட்டார். இது அவரின் 21-வது சதமாகும். செஞ்சூரியனில் சச்சின் தெண்டுல்கருக்குப் பின் சதமடிக்கும் 2-வது இந்தியர் இவராவார்.

    மறுமுனையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 68-வர் ஓவரின் முதல் பந்தில் கவனக்குறைவாக 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். #SAvIND #ViratKohli #HardikPandya
    Next Story
    ×