என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதம்- ஹர்திக் பாண்டியா ரன்அவுட்
Byமாலை மலர்15 Jan 2018 9:26 AM GMT (Updated: 15 Jan 2018 9:26 AM GMT)
செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா ரன்அவுட் ஆனார். #SAvIND #ViratKohli
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 61 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 65-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் கோலி.
67-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். விராட் கோலி. 146 பந்தில் சதத்தை தொட்டார். இது அவரின் 21-வது சதமாகும். செஞ்சூரியனில் சச்சின் தெண்டுல்கருக்குப் பின் சதமடிக்கும் 2-வது இந்தியர் இவராவார்.
மறுமுனையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 68-வர் ஓவரின் முதல் பந்தில் கவனக்குறைவாக 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். #SAvIND #ViratKohli #HardikPandya
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 61 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 65-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் கோலி.
67-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். விராட் கோலி. 146 பந்தில் சதத்தை தொட்டார். இது அவரின் 21-வது சதமாகும். செஞ்சூரியனில் சச்சின் தெண்டுல்கருக்குப் பின் சதமடிக்கும் 2-வது இந்தியர் இவராவார்.
மறுமுனையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 68-வர் ஓவரின் முதல் பந்தில் கவனக்குறைவாக 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். #SAvIND #ViratKohli #HardikPandya
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X