search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்னா நேவால், பிவி சிந்துவிற்கு எதிராக ஒவ்வொரு முறையும் புதிய யுக்தி: கரோலினா மரின்
    X

    சாய்னா நேவால், பிவி சிந்துவிற்கு எதிராக ஒவ்வொரு முறையும் புதிய யுக்தி: கரோலினா மரின்

    சாய்னா நேவால், பிவி சிந்து ஆகியோருக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் புதுப்புது யுக்திகளை உருவாக்குவேன் என்று காரோலினா மரின் கூறியுள்ளார்.
    பெண்கள் பேட்மிண்டனில் தலைசிறந்த வீராங்கனையாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின் உள்ளார். ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் இறுதிப் போட்டியில் பிவி சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றவர்.

    தற்போது இந்தியாவில் பிரிமீயர் பேட்மிண்டன் லீக் நடைபெற்று வருகிறது. இதில் கரோலினா மரின் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து ஆகியோரை எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு போட்டியில் புதிய யுக்திகளை உருவாக்குவேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து கரோலினா மரின் கூறுகையில் ‘‘சாய்னா, பிவி சிந்து இருவரும் வலுவான, மிகச் சிறந்த வீராங்கனைகள். இருவரும் மாறுபட்ட திறமை பெற்ற வீராங்கனைகள். அவர்களை எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் புதுப்புது யுக்திகளை உருவாக்குவேன்’’ என்றார்.

    பிரிமீயர் பேட்மிண்டன் லீக் தொடரில் கரோலினா மரின் ஐதராபாத் ஹன்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
    Next Story
    ×