என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேசம்
Byமாலை மலர்24 Dec 2017 10:00 PM GMT (Updated: 24 Dec 2017 10:00 PM GMT)
வங்காளதேசத்தில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
டாக்கா:
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, வங்காளதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன. 17-ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
வங்காளதேச தலைநகரான டாக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 41-வது நிமிடத்தில் வங்காளதேசத்தின் ஷம்சுன் நஹர் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து வங்காளதேசம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, வங்காளதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன. 17-ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
வங்காளதேச தலைநகரான டாக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 41-வது நிமிடத்தில் வங்காளதேசத்தின் ஷம்சுன் நஹர் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து வங்காளதேசம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X