search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சீன வீராங்கனையை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து
    X

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சீன வீராங்கனையை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை சென் யுபையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    துபாய்:

    உலகின் முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் தொடங்கியது. இந்த போட்டி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முதலில் நடைபெற்ற மூன்று லீக் போட்டிகளிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபாரமாக விளையாடி, அரையிறுதி போட்டியில் நுழைந்தார்.

    இந்நிலையில், உலக சூப்பர் சீரிஸ் தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சிந்து, சீன வீராங்கனை சென் யு பையை எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் இருந்தே சிந்து அபாரமாக விளையாடினார். இதனால் அவர் 21-15 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையிடம் இருந்து முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார்.

    இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிந்து சிறப்பாக விளையானார். சீன வீராங்கனை இரண்டாவது செட்டை கைப்பற்ற போராடினார். ஆனால், சிந்து அந்த செட்டையும் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், சிந்து 21-15, 21-18 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை சென் யுபையை எளிதில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
    Next Story
    ×