search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தினார் பி.வி.சிந்து
    X

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தினார் பி.வி.சிந்து

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

    துபாய்:

    உலகின் முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நான்காவது நிலையில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனை சயகா சாட்டோவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் சிந்து அபாரமாக விளையாடினார். இதனால் அவர் 21-13 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-12 என கைப்பற்றினார். இதன்மூலம், சிந்து 21-13, 21-12 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தினார்.

    இதேபோல், 2-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐந்தாம் நிலை வீரரான சோ டெய்ன்சென்னுடன் (தைவான்) மோதினார். இதில், சோ டெய்ன்சென்னின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 21-18, 21-18 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். இதனால் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



    Next Story
    ×