search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக சதம்: ஷேவாக்கை முந்திய ரோகித்சர்மா
    X

    அதிக சதம்: ஷேவாக்கை முந்திய ரோகித்சர்மா

    இந்தியா - இலங்கை இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் ஷேவாக்கை முந்தி ரோகித் சர்மா 4-வது இடத்துக்கு முன்னேறினார்.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மாதான். இவர் 153 பந்தில் 13 பவுண்டரி, 12 சிக்சருடன் 208 ரன்கள் குவித்தார். இது அவருக்கு 3-வது இரட்டை சதமாகும்.

    இதன் மூலம் ரோகித்சர்மா தனது 16-வது சதத்தை (173 போட்டி) நேற்று பதிவு செய்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் 4-வது இடத்தை அவர் பிடித்தார். 5-வது இடத்தில் இருந்த ரோகித்சர்மா, ஷேவாக்கை முந்தி 4-வது இடத்துக்கு முன்னேறினார். ஷேவாக் 15 சதம் அடித்து (241 ஆட்டம்) இருந்தார்.

    அதிக சதம் அடித்த ‘டாப் 5’ இந்திய வீரர்கள் வருமாறு:-


     

    Next Story
    ×