என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாநில கைப்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
தொடக்க விழாவில் வருமான வரி இணை கமிஷனர் எஸ்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச் செயலாளர் ஏ.கே. சித்திரைப்பாண்டியன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, ரோமா குழும நிர்வாகி ராஜன், போட்டி அமைப்பு குழுவினர் பழனியப்பன், ஜெகதீசன், பாலச்சந்திரன், உபைதுர் ரகுமான், கேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 25-22, 26-24 என்ற கணக்கில் எஸ்.டி.சி (பொள்ளாச்சி) அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.பி. அணி 20-25, 27-25, 20-25 என்ற கணக்கில் சென்னை ஸ்பைக்கர்சிடம் அதிர்சசிகரமாக தோற்றது.
பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப் 25-20, 25-17 என்ற கணக்கில் விஜி.எஸ். (தாம்பரம்) அணியை வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் ஜேப்பியார் 25-22, 25-13 என்ற கணக்கில் பி.கே.ஆர். (கோபிசெட்டிபாளையம்) அணியை தோற்கடித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்