search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார்
    X

    நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார்

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று புகழப்படும் அர்ஜென்டினா வீரர் மரடோனா, ‘தான் கால்பந்தின் கடவுள் அல்ல’ என்று கூறியுள்ளார்.
    அர்ஜென்டினா அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டியேகோ மரடோனா. 1986-ம் ஆண்டு இவரது தலைமையில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வாங்கியது. தனது அபார ஆட்டத்தால் தனி ஒரு மனிதனாக நின்று கோப்பையை வாங்கிக் கொடுத்தார்.

    கால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார்.



    பின்னர் பேசுகையில் ‘‘நான் கால்பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சிம்பிள் கால்பந்து வீரர். கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒருமுறை வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
    Next Story
    ×