என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: ரோகித் சர்மா
Byமாலை மலர்11 Dec 2017 2:00 AM GMT (Updated: 11 Dec 2017 2:00 AM GMT)
இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் 70 முதல் 80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
112 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் அல்ல. இன்னும் 70 முதல் 80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். எல்லா நாட்களிலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் கிடைக்காது. எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தாலும் அதற்கு தகுந்தபடி நம்மை மாற்றிக்கொண்டு விளையாடுவதே முக்கியமாகும்.
பாடம் கற்றுக்கொள்வதற்குரிய ஒரு ஆட்டமாக இது இருந்தது. டோனி, இந்திய அணிக்காக நீண்ட காலமாக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் இந்திய அணியின் தூண் ஆவார். அவருக்கு யாராவது ஒரு வீரர் நன்கு ஒத்துழைப்பு தந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். கேப்டனாக முதல் ஆட்டத்திலேயே தோற்றதை நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியாது.
யாரும் தோல்வியை விரும்பமாட்டார்கள். தோல்வியை மறந்து விட்டு எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கவனம் செலுத்தி, சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும். ரஹானேவை, நாங்கள் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவே அடையாளம் கண்டுள்ளோம். அதனால் தான் அவரை இன்றைய (நேற்று) ஆட்டத்தில் சேர்க்கவில்லை.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
112 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் அல்ல. இன்னும் 70 முதல் 80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். எல்லா நாட்களிலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் கிடைக்காது. எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தாலும் அதற்கு தகுந்தபடி நம்மை மாற்றிக்கொண்டு விளையாடுவதே முக்கியமாகும்.
பாடம் கற்றுக்கொள்வதற்குரிய ஒரு ஆட்டமாக இது இருந்தது. டோனி, இந்திய அணிக்காக நீண்ட காலமாக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் இந்திய அணியின் தூண் ஆவார். அவருக்கு யாராவது ஒரு வீரர் நன்கு ஒத்துழைப்பு தந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். கேப்டனாக முதல் ஆட்டத்திலேயே தோற்றதை நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியாது.
யாரும் தோல்வியை விரும்பமாட்டார்கள். தோல்வியை மறந்து விட்டு எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கவனம் செலுத்தி, சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும். ரஹானேவை, நாங்கள் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவே அடையாளம் கண்டுள்ளோம். அதனால் தான் அவரை இன்றைய (நேற்று) ஆட்டத்தில் சேர்க்கவில்லை.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X