என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல் கால்பந்து: லீக் போட்டிகளில் மும்பை, புனே அணிகள் வெற்றி
Byமாலை மலர்10 Dec 2017 11:26 PM GMT (Updated: 10 Dec 2017 11:27 PM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில் மும்பை சிட்டி எப்.சி., எப்.சி. புனே சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.
புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி, சென்னையின் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
சென்னையின் எப்.சி. அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. மும்பை சிட்டி எப்.சி அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வியை கண்டுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60-வது நிமிடம் சென்னை அணியினர் செய்த தவறின் காரணமாக மும்பை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மும்பையின் அச்சில் எமனா கோலாக மாற்றினார். அதன்பின் இரு அணியினரும் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற மும்பை அணி 7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக ஜெம்ஷெத்பூர் நகரில் மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ஜேம்ஷெத்பூர் எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின. இப்போட்டியின் 30-வது நிமிடம் புனே அணியின் அடில் கான் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புனே அணி 9 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
அடுத்ததாக 14-ம் தேதி புனேவில் நடைபெறும் லீக் போட்டியில் பெங்களுரு எப்.சி - எப்.சி. புனே சிட்டி அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி, சென்னையின் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
சென்னையின் எப்.சி. அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. மும்பை சிட்டி எப்.சி அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வியை கண்டுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60-வது நிமிடம் சென்னை அணியினர் செய்த தவறின் காரணமாக மும்பை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மும்பையின் அச்சில் எமனா கோலாக மாற்றினார். அதன்பின் இரு அணியினரும் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற மும்பை அணி 7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக ஜெம்ஷெத்பூர் நகரில் மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ஜேம்ஷெத்பூர் எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின. இப்போட்டியின் 30-வது நிமிடம் புனே அணியின் அடில் கான் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புனே அணி 9 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
அடுத்ததாக 14-ம் தேதி புனேவில் நடைபெறும் லீக் போட்டியில் பெங்களுரு எப்.சி - எப்.சி. புனே சிட்டி அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X