என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாக்பூர் டெஸ்ட்: முரளி விஜய் சதம்; 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 185/1
Byமாலை மலர்25 Nov 2017 8:45 AM GMT (Updated: 25 Nov 2017 8:45 AM GMT)
நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர் முரளி விஜய் 187 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (3), ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதலில் மிகவும் மந்தமாக விளையாடிய இருவரும், நேரம் செல்லசெல்ல அதிரடியாக விளையாட ஆரம்பித்தினர்.
முரளி விஜய் 112 பந்தில் 6 பவுண்டரியுடனும், புஜாரா 145 பந்தில் 7 பவுண்டரியுடனும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னர் முரளி விஜய் அதிரடியாக விளையாடினார். அவர் 187 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். 2-வது அரைசதம் அடிக்க 75 பந்துகளே எடுத்துக் கொண்டார்.
இந்த சதம் மூலம் 52 டெஸ்ட் போட்டிகளில் 10 சதம் அடித்துள்ளார். மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முரளி விஜய், அதன்பின் தற்போதுதான் இந்திய அணியில் இடம்பிடித்தள்ளார். சர்வதேச போட்டியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இவரது சதத்தால் இந்திய அணி 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்துள்ளது. முரளி விஜய் 106 ரன்னுடனும், புஜாரா 71 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதலில் மிகவும் மந்தமாக விளையாடிய இருவரும், நேரம் செல்லசெல்ல அதிரடியாக விளையாட ஆரம்பித்தினர்.
முரளி விஜய் 112 பந்தில் 6 பவுண்டரியுடனும், புஜாரா 145 பந்தில் 7 பவுண்டரியுடனும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னர் முரளி விஜய் அதிரடியாக விளையாடினார். அவர் 187 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். 2-வது அரைசதம் அடிக்க 75 பந்துகளே எடுத்துக் கொண்டார்.
இந்த சதம் மூலம் 52 டெஸ்ட் போட்டிகளில் 10 சதம் அடித்துள்ளார். மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முரளி விஜய், அதன்பின் தற்போதுதான் இந்திய அணியில் இடம்பிடித்தள்ளார். சர்வதேச போட்டியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இவரது சதத்தால் இந்திய அணி 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்துள்ளது. முரளி விஜய் 106 ரன்னுடனும், புஜாரா 71 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X