search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முரளிவிஜய்-புஜாரா நிதானமான ஆட்டம்
    X

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முரளிவிஜய்-புஜாரா நிதானமான ஆட்டம்

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் முரளிவிஜய் மற்றும் புஜாரா தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.

    நாக்பூர்:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. கேப்டன் சன்டிமால் அதிகபட்சமாக 57 ரன்னும், கருணாரத்னே 51 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 4 விக்கெட்டும். ரவீந்திர ஜடேஜா, இஷாந்த்சர்மா தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 11ரன் எடுத்து இருந்தது. முரளிவிஜய், புஜாரா தலா 2 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று (சனிக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    முரளிவிஜய்யும், புஜாராவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    41-வது ஓவரில் இந்தியா 98 ரன்னை தொட்டது. முரளிவிஜய் 57 ரன்னிலும், புஜாரா 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இருவரும் தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    Next Story
    ×