என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சியாளராக விரும்பினேன்: கங்குலி புதிய தகவல்
Byமாலை மலர்25 Nov 2017 6:42 AM GMT (Updated: 25 Nov 2017 6:46 AM GMT)
இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி.
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் அவர் கடந்த காலம் குறித்து வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-
வாழ்க்கையில் எப்போது மாற்றம் ஏற்படும் என்று கூற இயலாது. 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கவில்லை. அப்போது சச்சின் கேப்டன் ஆக இருந்தார். ஆனால் 3 மாதத்தில் எனக்கு கேப்டன் பதவியே கிடைத்தது.
இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் டால்மியாவோ என்னை நிர்வாகியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 6 மாதம் கழித்து முயற்சிக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அதோடு எனக்காக வாய்ப்பும் இல்லாமல் போனது. எனவே நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரானேன்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X