search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியாளராக விரும்பினேன்: கங்குலி புதிய தகவல்
    X

    பயிற்சியாளராக விரும்பினேன்: கங்குலி புதிய தகவல்

    இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி.

    பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் அவர் கடந்த காலம் குறித்து வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

    வாழ்க்கையில் எப்போது மாற்றம் ஏற்படும் என்று கூற இயலாது. 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கவில்லை. அப்போது சச்சின் கேப்டன் ஆக இருந்தார். ஆனால் 3 மாதத்தில் எனக்கு கேப்டன் பதவியே கிடைத்தது.

    இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் டால்மியாவோ என்னை நிர்வாகியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 6 மாதம் கழித்து முயற்சிக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அதோடு எனக்காக வாய்ப்பும் இல்லாமல் போனது. எனவே நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரானேன்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    Next Story
    ×