search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், மத்திய விளையாட்டு துறை மந்திரியுடன் சந்திப்பு
    X

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், மத்திய விளையாட்டு துறை மந்திரியுடன் சந்திப்பு

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி, பொதுமேலாளர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை சந்தித்து பேசினர்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி, பொதுமேலாளர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்று இந்தி கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள நிலைப்பாடு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான நேரடி போட்டி தொடர் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வரும் விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×