என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாங்காங் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி
Byமாலை மலர்22 Nov 2017 7:30 AM GMT (Updated: 22 Nov 2017 10:23 AM GMT)
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னாநேவால் வெற்றி பெற்றார்.
கெவ்லோன்:
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னாநேவால்- டென் மார்க் வீராங்கனை மெட்டே போல்சென் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-19, 23-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 46 நிமிடம் நடந்தது. சாய்னா நேவால் 2-வது சுற்றில் சீனா வீராங்கனை சென் யூபெய்யுடன் மோதுகிறார்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து தனது முதல் சுற்றில் ஹாங் காங்கின் வேனுஸ்யூட்யுடன் மோதுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப்- தென்கொரியா வின் டாங்லீ மோதினர். இதில் காஷ்யப் 21-15, 9-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதேபோல் மற்றோரு இந்திய வீரரான சுபரத் வர்மா முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அவர் இந்தோனேஷிய வீரர் டாமி சுகிடோவிடம் 15-21, 8-21, என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னாநேவால்- டென் மார்க் வீராங்கனை மெட்டே போல்சென் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-19, 23-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 46 நிமிடம் நடந்தது. சாய்னா நேவால் 2-வது சுற்றில் சீனா வீராங்கனை சென் யூபெய்யுடன் மோதுகிறார்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து தனது முதல் சுற்றில் ஹாங் காங்கின் வேனுஸ்யூட்யுடன் மோதுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப்- தென்கொரியா வின் டாங்லீ மோதினர். இதில் காஷ்யப் 21-15, 9-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதேபோல் மற்றோரு இந்திய வீரரான சுபரத் வர்மா முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அவர் இந்தோனேஷிய வீரர் டாமி சுகிடோவிடம் 15-21, 8-21, என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X