search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வீரர்கள் விளையாட விருப்பம் இல்லையெனில் ஓய்வு எடுக்கலாம் - கபில் தேவ்
    X

    கிரிக்கெட் வீரர்கள் விளையாட விருப்பம் இல்லையெனில் ஓய்வு எடுக்கலாம் - கபில் தேவ்

    கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாடுவதில் விருப்பம் இல்லையெனில் அவர்கள் ஓய்வு எடுக்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
    ஐதராபாத்:

    கிரிக்கெட் வீரர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் சோர்வடைகின்றனர். பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.



    இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறும் போது, கிரிக்கெட் என்பது ஒரு தொழில்ரீதியான விளையாட்டாகும். அதனால் அவர்கள் விளையாட வேண்டாம் என நினைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பத்திரிக்கையாளர்கள் செய்தியை எழுதாவிடில் மற்றொரு செய்தியாளர் அதனை எழுதுவார். மற்ற துறையை சேர்ந்தவர்கள் தங்கள் விருப்பப்படி இருப்பர்.



    வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அவர்கள் விருப்பப்படி செயல்பட வேண்டும். இந்திய வீரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவிற்கு அற்புதமான கிரிக்கெட் அணி கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
    Next Story
    ×