search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் பயிற்சி முகாம்: பிசிசிஐ
    X

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் பயிற்சி முகாம்: பிசிசிஐ

    தென்ஆப்பிரிக்கா தொடருக்காக இந்திய அணி செல்லும் முன், அவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய அணி இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளயைாடுகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் மூன்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.

    கடைசியாக நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24-ந்தேதியோடு முடிவடைகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா தொடருக்காக இந்தியா நான்கு நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து புறப்படுகிறது.



    முதல் டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி நடக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடருக்கு இந்திய அணியை, இலங்கை தொடர் முடிந்தவுடன் அப்படியே தென்ஆப்பிரிக்கா அனுப்ப பிசிசிஐ விரும்பவில்லை. இதனால் இடைப்பட்ட நான்கு நாட்களுக்குள் முகாம் ஒன்ற நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த முகாமில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள்.
    Next Story
    ×