என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: கொல்கத்தா சென்றடைந்தனர் இந்திய வீரர்கள்
Byமாலை மலர்13 Nov 2017 1:12 PM GMT (Updated: 13 Nov 2017 1:12 PM GMT)
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் கொல்கத்தா சென்றடைந்தனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது.
அதன்பின் இந்திய வீரர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர். வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் தொடங்க இருப்பதால், டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் கொல்கத்தா சென்றனர். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட சில வீரர்கள் நேற்று மாலை கொல்கத்தா சென்றடைந்தனர். உமேஷ் யாதவ், தவான் ஆகியோரும் சென்றடைந்தனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று காலை சென்றடைந்தார். மற்ற வீரர்களும் இன்றைக்குள் கொல்கத்தா சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் கொல்கத்தா சென்றடைந்த பின்னர், இந்தியா நாளை காலையில் இருந்து பயிற்சியை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் இந்திய வீரர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர். வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் தொடங்க இருப்பதால், டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் கொல்கத்தா சென்றனர். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட சில வீரர்கள் நேற்று மாலை கொல்கத்தா சென்றடைந்தனர். உமேஷ் யாதவ், தவான் ஆகியோரும் சென்றடைந்தனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று காலை சென்றடைந்தார். மற்ற வீரர்களும் இன்றைக்குள் கொல்கத்தா சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் கொல்கத்தா சென்றடைந்த பின்னர், இந்தியா நாளை காலையில் இருந்து பயிற்சியை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X