search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள்தான் உருவாக்க வேண்டும்: ஹர்திக் பாண்டியா
    X

    ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள்தான் உருவாக்க வேண்டும்: ஹர்திக் பாண்டியா

    ஒவ்வொரு வாய்ப்புகளையும் நீங்கள்தான் உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உள்ளார். கபில்தேவிற்குப் பிறகு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ள ஹர்திக் பாண்டியா, வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் எனக் கருதப்படுகிறார். இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் ஹர்திக் பாண்டியா, குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர்.

    கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்த பின்னர் ஆட்டத்திறனுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டதுடன் தன்னுடைய ஸ்டைலையும் முற்றிலுமாக மாற்றியுள்ளார்.  ஹேர்ஸ்டைலையும் அடிக்கடி மாற்றம் செய்து அசத்தி வருகிறார்.



    இவர் வளர்ந்து வரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

    ‘‘வாழ்க்கை வாய்ப்புகள் பற்றியது. ஒவ்வொரு வாய்ப்புகளையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் வாய்ப்புதான், நீங்கள் யார்? என்பதை அடையாளம் காட்டும் வகையில் உங்களை உருவாக்கும்’’ என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளா்.



    இந்த மாதத்திற்கான மேக்சிம்ஸ்டீட் புத்தகத்தின் அட்டைப்படத்தில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார்.
    Next Story
    ×