என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக ஆண்கள் டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் பெடரர் வெற்றி
Byமாலை மலர்13 Nov 2017 3:41 AM GMT (Updated: 13 Nov 2017 3:41 AM GMT)
உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.
லண்டன்:
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கு நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மற்றும் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் தகுதி பெற முடியவில்லை. சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தகுதி பெற்ற போதிலும் காயத்தால் விலகினார்.
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘போரிஸ் பெக்கர்’ அணி பிரிவில் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், ‘பீட் சாம்ப்ராஸ்’ அணி பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
தொடக்க நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 9-ம் நிலை வீரர் ஜாக் சோக்கை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
1 மணி நேரம் 31 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜாக் சோக்கை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கு நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மற்றும் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் தகுதி பெற முடியவில்லை. சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தகுதி பெற்ற போதிலும் காயத்தால் விலகினார்.
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘போரிஸ் பெக்கர்’ அணி பிரிவில் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், ‘பீட் சாம்ப்ராஸ்’ அணி பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
தொடக்க நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 9-ம் நிலை வீரர் ஜாக் சோக்கை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
1 மணி நேரம் 31 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜாக் சோக்கை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X