என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன்
Byமாலை மலர்12 Nov 2017 10:30 PM GMT (Updated: 12 Nov 2017 10:30 PM GMT)
அமெரிக்காவில் நடைபெற்று வரும் நாக்ஸ்வில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி தட்டிச்சென்றது.
நாக்ஸ்வில்:
ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, இரண்டாம் நிலை ஜோடியான அமெரிக்காவின் ஜேம்ஸ் செர்ரேடானி - ஆஸ்திரேலியாவின் ஜான்-பாட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் செட்டை 7-6 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி இரண்டாவது செட்டையும் 7-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டென்னிஸ் குட்லா - கனடாவின் பிலிப் பெலிவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், பெலிவோ 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X