என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.எஸ்.எல்.: வரைவு பட்டியலில் பிராவோ, இம்ரான் தாஹிர் உள்பட 200 வெளிநாட்டு வீரர்கள்
Byமாலை மலர்11 Nov 2017 11:01 AM GMT (Updated: 11 Nov 2017 11:01 AM GMT)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடருக்கான வரைவு பட்டியலில் வெயின் பிராவோ, இம்ரான் தாஹிர் உள்பட 200 வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இரண்டு சீசன் முடிந்த நிலையில் அடுத்த வருடம் 3-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான வரைவு பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.
வரைவு பட்டியலில் 500 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் 200 பேர் வெளிநாட்டு வீரர்களாவார்கள். அவர்களில் வெயின் பிராவோ, இம்ரான் தாஹிர், கிறிஸ் லின், டுமினி, கார்லோஸ் பிராத்வைட், ஷேன் வாட்சன், ஜிம்மி நீஷம், மேத்யூஸ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், மெக்கிளேனகன், மிட்செல் ஜான்சன், கொலின் முன்றோ, லூக் ரோஞ்சி, ரஷித், வெயின் பர்னெல், திசாரா பெரேரா, ரஷித் கான், கொலின் இங்ராம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
முதல் இரண்டு சீசனில் ஐந்து அணிகள் இடம்பிடித்திருந்தன. 3-வது தொடரில் முல்தான் சுல்தான் என்ற அணி புதிதாக இடம்பிடிக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுப்பதற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடலாம். ஒரு அணியில் 20 வீரர்கள் இடம்பிடிக்கலாம். கடந்த முறை விளையாடியதில் 9 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
வரைவு பட்டியலில் 500 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் 200 பேர் வெளிநாட்டு வீரர்களாவார்கள். அவர்களில் வெயின் பிராவோ, இம்ரான் தாஹிர், கிறிஸ் லின், டுமினி, கார்லோஸ் பிராத்வைட், ஷேன் வாட்சன், ஜிம்மி நீஷம், மேத்யூஸ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், மெக்கிளேனகன், மிட்செல் ஜான்சன், கொலின் முன்றோ, லூக் ரோஞ்சி, ரஷித், வெயின் பர்னெல், திசாரா பெரேரா, ரஷித் கான், கொலின் இங்ராம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
முதல் இரண்டு சீசனில் ஐந்து அணிகள் இடம்பிடித்திருந்தன. 3-வது தொடரில் முல்தான் சுல்தான் என்ற அணி புதிதாக இடம்பிடிக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுப்பதற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடலாம். ஒரு அணியில் 20 வீரர்கள் இடம்பிடிக்கலாம். கடந்த முறை விளையாடியதில் 9 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X